கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

News image
முல்லைப் பெரியாறு அணை (கோப்பு படம்)
Updated On :24 செப்டம்பர் 2022, 7:35 am

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை அணைக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு 511 கன அடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை விநாடிக்கு 453 கன அடியாகவும், சனிக்கிழமை விநாடிக்கு 294.36 கன அடியாகவும் இருந்தது. அதேநேரத்தில் அணையிலிருந்து விநாடிக்கு 1778.75 கன அடி தண்ணீர் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்பட்டது. 

அணை நிலவரம்

சனிக்கிழமை அணையின் நீர்மட்டம் 133.90 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 5,609 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு, 294 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1778.75 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.

 சுருளி அருவி (கோப்பு படம்)

 சுருளி அருவி (கோப்பு படம்)

மின் உற்பத்தி

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், நான்கு மின்னாக்கிகள் மூலம் தலா 40 மெகாவாட் என மொத்தம் 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

குளிக்கத் தடை

தேனி மாவட்டம் பச்சக்கூமாச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள தூவானம் அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீரை திறந்து விடுவதால், சுருளி அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது, இதனால் 50 ஆவது நாளாக சுருளி அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு செய்யப்பட்டது. வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, தூவானம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது குறைந்தால், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

மஹாளய அமாவாசையன்று குளிக்க அனுமதி 

ஆண்டு தோறும் வரும் புரட்டாசி மாத அமாவாசை ஞாயிற்றுக்கிழமை வருகிறது, இது ஆன்மீக ரீதியில் சிறப்பான நாளாகும், இதை மஹாளய அமாவாசை என்பர். அன்று புனித நதிகளில் நீராடி முன்னோர் வழிபாடுகள் செய்வது நன்மை தரும், சுருளி அருவியில் குளிக்கத் தடை இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை குளிக்க அனுமதிக்க ஆட்சியர் ஏற்பாடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.