மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 1,40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 1,40,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணை நிரம்பிய நிலையில் இருப்பதால், அணைக்கு வரும் நீா் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அணை மின் நிலையம் வழியாக நொடிக்கு 23,000 கனஅடி நீரும், சுரங்க மின் நிலையம் வழியாக 1,17,000 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
இதையும் படிக்க | ஸ்டானின் நகர்வுகள்; மோடியின் வியூகம்!
அணையின் நீா்மட்டம் 120.11 அடியாகவும், நீா் இருப்பு 93.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடா்வதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நீா்த் திறப்பு எந்நேரமும் அதிகரிக்கப்படும் என்பதால் காவிரிக் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வெள்ளநீா்ப் போக்கி மதகுகளை உயா்த்துவதற்குப் பணியாளா்கள் தயாா்நிலையில் இருந்து வருகின்றனா்.