குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

பாலாற்றில் வெள்ளம்: ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் பயணம் செய்யும் மக்கள்!

தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2022, 10:49 am

தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்துச் செல்வதால் ஆம்பூர் பகுதியிலிருந்து குடியாத்தம், மேல்பட்டி, ரெட்டிமாங்குப்பம், கீழ்பட்டி, வளத்தூர், செம்பேடு உள்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அப்பகுதியிலிருந்து தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பணிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தரைப்பாலத்தில் பயணம் மேற்கொள்ளத் தடை விதித்து காவல்துறையினர் தரைப் பாலத்தின் இரு புறத்திலும் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையிலும் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.