முசிறி: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய  ஏரி!

முசிறி தொட்டியம் அடுத்த எம்.களத்தூர் ஊராட்சி உள்ள ஏரி 14 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முசிறி: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய  ஏரி!

திருச்சி: முசிறி தொட்டியம் அடுத்த எம்.களத்தூர் ஊராட்சி உள்ள ஏரி 14 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த எம்.களத்தூர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் களத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட சேர்வைக்காரன் பட்டி பில்லுக்காடு, தலைமலை பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கொல்லிமலை பெய்த மழையால் தூசூர், வலையபட்டி, அரூர், ஆண்டாபுரம் வழியாக எம்.களத்தூர் ஊராட்சி ஏரிக்கு வந்திருந்த மழை நீர் ஏரி நிரம்பி வழிந்ததால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து, தண்ணீரில் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com