அவிநாசி: சிறு,குறு தொழில்களுக்கான மின் கட்டண உயர்வை முழுவதும் ரத்து செய்யக்கோரி பாஜக நெசவாளர் பிரிவினர் அவிநாசியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைத்தறி, விசைத்தறி, நூற்பாலை, ஜவுளித் துறை சார்ந்த சிறு குறு தொழில்களுக்கு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை முழுவதும் ரத்து செய்ய வேண்டும். விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி செய்வதில் உள்ள முறைகேடுகளையும், கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் போலி உறுப்பினர் சேர்க்கையை கண்டித்தும் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை பாஜக நெசவாளர் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் மர்மப் பொருள் வீச்சு: இபிஎஸ் கண்டனம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக நெசவாளர் பிரிவினர்
ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக நெசவாளர் பிரிவு மாநிலத் தலைவர் கே. எஸ். பாலமுருகன் தலைமை வகித்தார்.நெசவாளர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர்கள், சார்பு அணியினர் உள்ளிட்ட பாஜகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.