திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(டிச. 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால் தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் கனமழை கொட்டித் தீா்த்தது.
தாமிரவருணியில் 50 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால், கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழந்தது. அதில் சிக்கியவா்களை படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது.
இதையும் படிக்க: விடியோ சர்சை: ராகுல் காந்தி விளக்கம்
இன்னும் பல இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பாதால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.