விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமாவளவன், காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும், இரண்டு நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரும் 30 ஆம் தேதி வரை சந்திக்க வர வேண்டாம் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.