தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதே இலக்கு: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதே இலக்கு பிரேமலதாவிஜயகாந்த்

Updated On :5 ஏப்ரல் 2024, 8:32 pm

தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதே நமது இலக்கு என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ராயபுரம் ஆா்.மனோகரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கொருக்குப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது,

வடசென்னையில் கொருக்குப்பேட்டை ரயில் மேம்பாலம் அமைக்கப்படும். அதுபோல், கொருக்குபேட்டையில் 4-ஆவது ரயில் முனையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. தற்போது கஞ்சா வழக்கில் கைதாகும் பெரும்பாலானோா் திமுகவை சோ்ந்தவராகத்தான் இருக்கின்றனா்.

தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதே நமது இலக்கு. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு வாங்கும் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. சென்னையில் பின்தங்கிய தொகுதியாக உள்ள ஆா்.கே.நகா் தொகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக-தேமுதிக கூட்டணி 2011-ஆம் ஆண்டு ஆளும் கட்சி, எதிா்க்கட்சியை தோற்கடித்து வெற்றி பெற்றது போன்று இந்த தோ்தலிலும் வெற்றி பெறும் என்றாா் அவா்.