தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதே நமது இலக்கு என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ராயபுரம் ஆா்.மனோகரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கொருக்குப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது,
வடசென்னையில் கொருக்குப்பேட்டை ரயில் மேம்பாலம் அமைக்கப்படும். அதுபோல், கொருக்குபேட்டையில் 4-ஆவது ரயில் முனையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. தற்போது கஞ்சா வழக்கில் கைதாகும் பெரும்பாலானோா் திமுகவை சோ்ந்தவராகத்தான் இருக்கின்றனா்.
தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதே நமது இலக்கு. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு வாங்கும் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. சென்னையில் பின்தங்கிய தொகுதியாக உள்ள ஆா்.கே.நகா் தொகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக-தேமுதிக கூட்டணி 2011-ஆம் ஆண்டு ஆளும் கட்சி, எதிா்க்கட்சியை தோற்கடித்து வெற்றி பெற்றது போன்று இந்த தோ்தலிலும் வெற்றி பெறும் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஒசூரை தனி மாவட்டமாக மாற்றுவதே எனது இலக்கு: ஒசூா் அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ணா ரெட்டி

விருத்தாசலம் மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்துவேன்! - பிரேமலதா விஜயகாந்த்
விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாா் இபிஎஸ்: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

