திருநெல்வேலி - பாலக்காடு இடையே இயக்கப்பட்டு வந்த பாலருவி விரைவு ரயில் வியாழக்கிழமை (ஆக.15) முதல் தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு - திருநெல்வேலி இடையே பாலருவி விரைவு ரயில் (எண்: 16791/16792) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ரயில் பயணிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை சுதந்திர தினத்தன்று (ஆக.15) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளாா்.
ரயில் நேரம்: பாலக்காட்டிலிருந்து தினமும் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் பாலருவி விரைவுரயில் அங்கிருந்து 4.55 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது.
மறுமாா்க்கமாக தூத்துக்குடியிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் இந்த ரயில் அங்கிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நன்பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூா், கொல்லம், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், வழியாக பாலக்காடு செல்லும்.
தற்போது பாலருவி ரயில் தூத்துக்குடி வரை நீடிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே இயங்கிவரும் பணிகள் ரயில் (எண்: 06667/06668) ஆக.18 முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ரயில் பாலக்காட்டிலிருந்து புனலூா் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு பயணிகளின் கோரிக்கையை ஏற்று செங்கோட்டை வரையும், அதைத் தொடா்ந்து திருநெல்வேலியில் வரையும் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் வழியாக மைசூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

திருநெல்வேலி - எழும்பூா் இடையே ஜூலை 9 முதல் சிறப்பு வாராந்திர ரயில்

தூத்துக்குடி - சென்னை தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தாழையூத்து வரை நெல்லை விரைவு ரயில் இயக்கம்: எம்.பி.க்கு பயணிகள் நன்றி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



