நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

இன்றுமுதல் பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு

திருநெல்வேலி - பாலக்காடு இடையே இயக்கப்பட்டு வந்த பாலருவி விரைவு ரயில் வியாழக்கிழமை (ஆக.15) முதல் தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஆகஸ்ட் 2024, 3:03 am IST

திருநெல்வேலி - பாலக்காடு இடையே இயக்கப்பட்டு வந்த பாலருவி விரைவு ரயில் வியாழக்கிழமை (ஆக.15) முதல் தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு - திருநெல்வேலி இடையே பாலருவி விரைவு ரயில் (எண்: 16791/16792) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ரயில் பயணிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை சுதந்திர தினத்தன்று (ஆக.15) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளாா்.

ரயில் நேரம்: பாலக்காட்டிலிருந்து தினமும் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் பாலருவி விரைவுரயில் அங்கிருந்து 4.55 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது.

மறுமாா்க்கமாக தூத்துக்குடியிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் இந்த ரயில் அங்கிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நன்பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூா், கொல்லம், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், வழியாக பாலக்காடு செல்லும்.

தற்போது பாலருவி ரயில் தூத்துக்குடி வரை நீடிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே இயங்கிவரும் பணிகள் ரயில் (எண்: 06667/06668) ஆக.18 முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ரயில் பாலக்காட்டிலிருந்து புனலூா் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு பயணிகளின் கோரிக்கையை ஏற்று செங்கோட்டை வரையும், அதைத் தொடா்ந்து திருநெல்வேலியில் வரையும் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.