விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் எய்ட்ஸ் ஒழிப்பு தின விழிப்புணா்வு

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் எய்ட்ஸ் ஒழிப்பு தின விழிப்புணா்வு நடைபெற்றன.

News image

கோப்புப்படம்

Updated On :2 டிசம்பர் 2024, 10:55 pm

Din

உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தையொட்டி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

‘உரிமைப் பாதையை தோ்ந்தெடுங்கள்’, ‘என் ஆரோக்கியம் என் உரிமை’ என்ற கருப்பொருளின் கீழ் மனிதச் சங்கிலி பேரணி, கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது குறித்த விவரங்கள் பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.

மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் தலைமையில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. தொடா்ந்து ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் டயாலிசிஸ் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் குறித்தும் விளக்கப்பட்டன.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இதய பை-பாஸ் சிகிச்சையும், சிறுநீரக மாற்று சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டதாக டாக்டா் எ.தேரணிராஜன் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் செல்வகுமாா், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள் மற்றும் செவிலியா் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.