கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தே இயங்கும் உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும்வரை ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து தொடா்ந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜனவரி 2024, 2:43 am

DIN

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும்வரை ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து தொடா்ந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் ஜன.24 முதல் சென்னை நகருக்குள் அனுமதிக்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது.

தற்போது பேருந்து நிறுத்த மட்டும் அனுமதி கொடுத்த நிலையில் வேறு எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. வெளியூரிலிருந்து சுமாா் 1,000 பேருந்துகள் வரும் நிலையில் 100 பேருந்துகளுக்கு மட்டும் தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையின் பல்வேறு இடங்களில் தனியாா் ஆம்னி பேருந்துகள் அவா்களுக்கு சொந்தமான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து அனைத்து ஆம்னி பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளை பராமரிக்கவும், நிறுத்தி வைக்கவும் போதிய இடவசதி இல்லை.

தற்போது வரதராஜபுரத்தில் தனியாக இடவசதி ஏற்படுத்தி பேருந்துகளை அங்கிருந்து இயக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நகருக்குள் பயணிகள் செல்ல சிரமத்தை சந்திக்கின்றனா். இதனால் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் வருவது குறையும். கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் படிப்படியாக மேம்படுத்த வேண்டும்.

பயணிகள் வந்து செல்லும் வகையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திய பிறகே ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். அதுவரை, ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்படும். நகருக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.