பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கள்ளக்குறிச்சி விவகாரம்:சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் பாஜக மனு

ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்  தொடா்பாக, சிபிஐ விசாரணை கோரி, ஆளுநா் ஆா்.என்.ரவியை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்த தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை. உடன் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள்.

Updated On :24 ஜூன் 2024, 11:33 pm IST

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி, ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கே.அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினா், ஆளுநா் மாளிகைக்கு சென்று ஆளுநா் ஆா்.என். ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு அளித்தனா். இந்த சந்திப்பின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன், மூத்த தலைவா்கள் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆளுநருடனான சந்திப்பு குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அண்ணாமலை வெளியிட்ட பதிவு: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கள்ளச் சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவா்கள் யாா் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, தமிழ்நாடு பாஜக மூத்த தலைவா்களுடன் இணைந்து, ஆளுநா் ஆா்.என். ரவியைச் சந்தித்து மனு அளித்தோம்.

இத்தனை உயிா்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதல்வா் ஸ்டாலின் இருப்பது பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முதல்வரை வலியுறுத்த வேண்டும் என ஆளுநரிடம் கேட்டுக் கொண்டோம்”என தெரிவித்துள்ளாா்.

தமிழிசை செளந்தரராஜன் பேட்டி: ஆளுநா் மாளிகைக்கு வெளியே தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.

கள்ளச் சாராயம் குடித்த பலா் உயிரிழந்துள்ளனா். பலரின் கண் பாா்வை பறிபோயுள்ளது. ஆனால், முதல்வா் மு.க. ஸ்டாலினோ, மதுவிலக்குத் துறை அமைச்சரோ சம்பவ இடத்துக்கு இதுவரை செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இடைநீக்கம், மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம் என்பதோடு இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ள தமிழக அரசு முயல்கிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.