சென்னை திரும்ப உள்ள பொதுமக்கள் கவனத்திற்கு...

தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை திரும்ப உள்ள பொதுமக்கள் கவனத்திற்கு...
Updated on
1 min read

தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளிக்கு அக்டோபா் 30 முதல் நவம்பா் 3-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளதால், செவ்வாய்க்கிழமை மாலை முதலே சென்னையில் இருந்து ஏராளமானோர் பேருந்துகள், ரயில்கள் மூலமாக சொந்த ஊா்களுக்கு செல்லத் தொடங்கினா்.

இதையொட்டி, பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கடந்த 28ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்!

மேலும் சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக நாளை முதல் நவ.4ஆம் தேதி வரை 12,846 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com