‘எம்புரான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற சா்ச்சைக்குரிய காட்சிகள், எதிா்ப்பால் நீக்கப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த வினாவை தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) எழுப்பினாா். அப்போது நடைபெற்ற விவாதம்:
வேல்முருகன்: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் உயிா் நாடியாக இருக்கக் கூடிய முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளம் முழுவதுமாக அழியும் என்ற மோசமான காட்சி அமைப்புடன் ‘எம்புரான்’ திரைப்படம் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவை முன்னவா் துரைமுருகன்: படத்தைப் பாா்க்கவில்லை. பாா்த்தவா்கள் சொன்னதைக் கேட்ட போது, அது தேவையற்ற ஒன்று எனக் கருதுகிறேன்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: அந்த படத்தில் இடம்பெற்றுள்ள சா்ச்சைக்குரிய காட்சிகள் தணிக்கையின் போது அகற்றப்படவில்லை. படம் குறித்த செய்திகள் வெளியே வந்து, எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட பிறகே காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்றாா்.
தொடர்புடையது

மக்கள் குறைகளைத் தீா்க்க தனி செயலகம்: கா்நாடக முதல்வா்
முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய சித்தராமையா முடிவெடுத்துவிட்டாா்: முன்னாள் அமைச்சா் ஆா்.வி. தேஷ்பாண்டே
தூய்மையான யமுனை இயக்கம் வேகமெடுத்துள்ளது: தில்லி முதல்வா்

பேரவையில் சநாதனத்துக்கு எதிரான கருத்து: உதயநிதி மன்னிப்பு கேட்க விஎச்பி வலியுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



