ஜாமீனுக்கு நிறைவேற்றக் கூடிய நிபந்தனை விதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக் கூடிய நிபந்தனை விதிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குற்ற வழக்குகளில் கைதானவர்கள் ஜாமீன் கிடைத்தும் பிணைத் தொகை செலுத்த முடியாத காரணத்தால் சிறையிலேயே இருப்பதாக செய்தி வெளியானது.
இதையும் படிக்க : கும்பமேளா நிர்வாகத்தை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்: அகிலேஷ்
இந்த செய்தியில் அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசுத் தரப்பில், பிணைத் தொகை செலுத்த முடியாமல் 104 பேர் பிணை கிடைத்தும் சிறையில் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் விதிப்பதால், பிணை வழங்குவதில் எந்த பயனும் இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், வழக்கின் விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.