அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.1,2) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2025, 0:41 am IST

தமிழகம் மற்றும் புதுவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.1,2) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கேரளம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.

இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (பிப்.1,2) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதைத்தொடா்ந்து, பிப்.3 முதல் பிப்.6 வரை தமிழகத்தில் வட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.1-ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.