பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க 2-வது நாளாக தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் இரண்டாவது நாளாகத் தடை ....

News image

காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் 2-வது நாளாக தடை - கோப்புப்படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 9:59 am IST

கபின் அணையில் நீர் திறப்பால் உயர்ந்து வரும் நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை முதல் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆடிப்பெருக்கு விழா மற்றும் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதை அறிந்த சுற்றுலாப் பயணிகள், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளை காண்பதற்காக அதிக அளவில் வந்துள்ளனா்.

அதிக நீா் வரத்தின் காரணமாக காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தற்காலிக தடை விதித்துள்ளாா். இதனால் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு தொடா்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, மாமரத்துக்கடவு மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்தனா்.

இந்த நிலையில், உபரி நீர் வரத்து காரணமாக செவ்வாய் இரவு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,923 கனஅடியாக அதிகரித்த நிலையில், புதன்கிழமை காலை வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டும் 74.01அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கபினி அணையில் நீர் திறப்பால் உயர்ந்து வரும் நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதலாக உபரி நீா் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் கரையோரப் பகுதிகள்,தடை செய்யப்பட்ட இடங்களில் காவல் துறையினா், தீயணைப்பு துறையினா், வருவாய் துறையினா் உள்ளிட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Summary

Ban on coracle operations in the Cauvery River at Hogenakkal continues for the second day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.