மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயருமா? நிதித்துறை செயலர் விளக்கம்!

அரசின் வருவாயைப் பெருக்க பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? என்பது குறித்து நிதித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:53 pm IST

தமிழகத்தில் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுவரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? என்பது குறித்து நிதித்துறை செயலாளர் சித்திக் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இன்று 2026 - 27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில், தவெக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவு குறித்து நிதித்துறை செயலாளர் சித்திக் விளக்கம் அளித்தார்.

அதில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ரூ. 560 கோடி.

வெற்றி வீடு ரூ. 1000 கோடி.

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம் ரூ. 313 கோடி.

ஊரக சாலைகள் புனரமைப்பு பணிகளுக்காக ரூ. 504 கோடி.

ஊரகப் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு வெற்றி இயக்கத்துக்கு ரூ. 2203 கோடி.

200 யூனிட் இலவச மின்சாரத்துக்காக ரூ. 1,545 கோடி.

பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ. 6082 கோடி.

அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ. 812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், வருவாய் மிகவும் குறைவாகவே உள்ளதால் அதனை பெருக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே உயர்ந்துள்ளதால், வரிகளை உயர்த்தும் திட்டம் இல்லை. எரிபொருளில் பெரும்பாலான வரி மத்திய அரசுக்கே செல்கிறது எனக் குறிப்பிட்டார்.

Summary

Will petrol and diesel prices rise Finance Secretary clarifies

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.