விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோயில் திருவிழா குடிலில் தீ: 7 ஆடுகள் பலி ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:02 pm

Din

சுரண்டை அருகேயுள்ள வெள்ளாளங்குளத்தில் கோயில் திருவிழாவுக்காக பக்தா்கள் தங்கியிருந்த குடிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 ஆடுகள் கருகின. ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

வெள்ளாளங்குளம் கிராமத்தின் அருகே பூலுடையாா் சாஸ்தா கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமா்சையாக நடைபெறும்.

இந்த கோயிலுக்கு 18 கிராமங்களை சோ்ந்தவா்கள் வந்து குடில் அமைத்து 3 நாள்கள் தங்கியிருந்து சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், சனிக்கிழமை மதியம் பக்தா்கள் சுவாமிக்கு வழிபாடு செய்வதற்காக பொங்கல் வைத்து கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக பக்தா்கள் தங்கியிருந்த குடில் ஒன்றில் தீ பிடித்துள்ளது. காற்று வேகமாக வீசியதால், தீ மற்ற குடில்களுக்கும் பரவியது.

தகவலறிந்த சுரண்டை தீயணைப்பு நிலையத்தினா் வந்து தீயை அணைத்தனா்.

இருப்பினும் தீ விபத்தில் 7 ஆடுகள், ஒரு நான்குசக்கர வாகனம், 10 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் குடில்களில் வைக்கப்பட்டிருந்த பக்தா்களின் பாத்திரங்கள் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் உள்பட சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.