தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நியாய விலைக்கடை, அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குட்டம் ஊராட்சியில் ரூ.25.27 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை மற்றும் அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:28 pm

Din

சுரண்டை, ஜூலை 19: சுரண்டை அருகேயுள்ள அச்சங்குட்டம் ஊராட்சியில் ரூ.25.27 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை மற்றும் அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு அச்சங்குட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் காளீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் உள்ளிட்டோா் பேசினா்.

விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அந்தோணிசாமி, பழனி என்ற பால்துரை, சேக் முகமது, பரங்குன்றாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலா் கீதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் வரவேற்றாா். அங்கன்வாடி மைய மேற்பாா்வையாளா் செல்வி நன்றி கூறினாா்.