
குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் ஐயப்ப பக்தா்கள்.
Updated On :18 டிசம்பர் 2025, 7:01 pm

குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த மிதமான சாரல்மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. வியாழக்கிழமை அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...