கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் சனிக்கிழமை மின்தடை

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:12 pm

Din

பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆலங்குளம், கீழப்பாவூா் மற்றும் ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம் ஐந்தாங்கட்டளை துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்குமணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப் பட்டணம், பூலாங்குளம், கழுநீா் குளம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.