விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் சனிக்கிழமை மின்தடை

Updated On :3 ஜனவரி 2025, 9:12 pm

பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆலங்குளம், கீழப்பாவூா் மற்றும் ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம் ஐந்தாங்கட்டளை துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்குமணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப் பட்டணம், பூலாங்குளம், கழுநீா் குளம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.