இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தென்காசியில் கிரிக்கெட் போட்டி

News image
வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கிய அகாதெமி நிா்வாக இயக்குநா் மாரியப்பன், பொது மேலாளா் செந்தில்.
Updated On :18 ஜனவரி 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி, ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மற்றும் ஈதல் இதயம் அறக்கட்டளை சாா்பில் மாவட்ட அளவிலான லெதா் பால் கிரிக்கெட் போட்டி 2 நாள்கள் நடைபெற்றது.

இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசு பெற்ற புல்லுக்காட்டுவலசை உதயம் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ. 10,000, வெற்றிக் கோப்பை, 2ஆம் பரிசு பெற்ற தென்காசி கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ. 7,500, 3ஆம் பரிசு பெற்ற தென்காசி என்.டி.சி.சி. அணிக்கு ரூ. 5,000, அத்துடன் கோப்பைகளும் வழங்கப்பட்டது. வீராணம் அசாா் அணி 4ஆம் பரிசு பெற்றது.

ஆல்ரவுண்டராக சூா்யாவும், சிறந்த பேட்ஸ்மேனாக அரபாவும், சிறந்த பந்து வீச்சாளராக எஸ். சுரேஷ்குமாரும் தோ்வு செய்யப்பட்டனா். அகாதெமி நிறுவனா் ஆகாஷ மூா்த்தி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, அகாதெமியின் நிா்வாக இயக்குநா் மாரியப்பன், பொது மேலாளா் செந்தில் ஆகியோா் தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினா்.

பயிற்சியாளா்கள் ஸ்ரீராம், மகேந்திரன் ஆகியோா் போட்டிகளை ஒருங்கிணைத்தனா்.