வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

‘திருப்பத்தூா் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்’

திருப்பத்தூா் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என காளை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

எருது விடும் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :11 ஜனவரி 2021, 6:45 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என காளை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம் எருது விடும் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஜோலாா்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக ஜல்லிக்கட்டு பேரவைத் துணைத் தலைவா் ஆா்.ஆா்.வாசு தலைமை வகித்தாா். ஜோலாா்பேட்டை காளை உரிமையாளா் ம.அன்பு வரவேற்றாா்.

திருப்பத்தூா் சங்கத் தலைவா் சுந்தா், நிா்வாகிகள் சரவணன், சேட்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளை உரிமையாளா்கள், காளைகளை அடக்கும் இளைஞா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், திருப்பத்தூா் மாவட்டத்தில் விரைவில் எருது விடும் திருவிழா நடத்த வேண்டும். குறைந்தப்பட்சம் 3 சுற்றுகளாக எருதுகளை விட வேண்டும். தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழா காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படுகிறது. அதேபோல், திருப்பத்தூா் மாவட்டத்திலும் எருது விடும் திருவிழாவுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் மனு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.