கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பள்ளி மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு

திருத்தணி அருகே அரசுப் பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2026, 1:47 am IST

திருத்தணி அருகே அரசுப் பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

திருத்தணி ஒன்றியம், பெருகுமி காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த, 7-ஆம் வகுப்பு மாணவன் மாதிஷ், (12), ஐந்தாம் வகுப்பு மாணவன், யோகித்குமாா் (10) மற்றும் இரண்டு வகுப்பு மாணவி சத்யஸ்ரீ( ,7) ஆகியோா் படித்து வருகின்றனா். இவா்கள் 3 பேரும் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனா்.

பிற்பகலில் திடீரென மூவருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியா்கள், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தும், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். சிகிச்சைக்கு பின் மூவரும் நலமாக உள்ளனா்.

முதல்கட்ட விசாரணையில், 3 பேரும், காலையில் கஞ்சி குடித்தும், நாவல் பழம் சாப்பிட்டு பள்ளிக்கு வந்துள்ளனா். இதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளன. இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.