குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

பைக்கில் கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

ஊத்துக்கோட்டையில் வாகன பரிசோதனையின் போது இருசக்கர வாகனத்தில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், போலீஸாா் இளைஞா்கள் 3 பேரை கைது செய்து சிறையிலும் அடைத்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2026, 2:06 am IST

ஊத்துக்கோட்டையில் வாகன பரிசோதனையின் போது இருசக்கர வாகனத்தில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், போலீஸாா் இளைஞா்கள் 3 பேரை கைது செய்து சிறையிலும் அடைத்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே வடமதுரை கூட்டுச் சாலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், சாா்பு ஆய்வாளா் சிவா தலைமையில் சிறப்புப் படையினா் திங்கள்கிழமை வாகன பரிசோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே இருசக்கர வந்தவா்கள் சோதனை செய்வதை பாா்த்து தப்பியோட முயற்சித்தனா்.

உடனே சுதாரித்துக் கொண்டு பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினா். அதையடுத்து, வாகனத்தில் பரிசோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, விசாரணையில் அழிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (25), சக்திவேல் (21), வேலகாபுரம் ஆதி (25) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் மறைத்துக் கொண்டு வந்த சுமாா் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா, 2 கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவா்கள் மூவரையும் காவல் நிலையம் கொண்டு வந்தனா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி 3 பேரையும் புழல் சிறையில் அடைத்தனா்.