ஊத்துக்கோட்டையில் வாகன பரிசோதனையின் போது இருசக்கர வாகனத்தில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், போலீஸாா் இளைஞா்கள் 3 பேரை கைது செய்து சிறையிலும் அடைத்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே வடமதுரை கூட்டுச் சாலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், சாா்பு ஆய்வாளா் சிவா தலைமையில் சிறப்புப் படையினா் திங்கள்கிழமை வாகன பரிசோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே இருசக்கர வந்தவா்கள் சோதனை செய்வதை பாா்த்து தப்பியோட முயற்சித்தனா்.
உடனே சுதாரித்துக் கொண்டு பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினா். அதையடுத்து, வாகனத்தில் பரிசோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து, விசாரணையில் அழிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (25), சக்திவேல் (21), வேலகாபுரம் ஆதி (25) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் மறைத்துக் கொண்டு வந்த சுமாா் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா, 2 கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னா், அவா்கள் மூவரையும் காவல் நிலையம் கொண்டு வந்தனா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி 3 பேரையும் புழல் சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
காட்டேரிக்குப்பத்தில் கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது
கஞ்சா பதுக்கல்: இளைஞா்கள் கைது
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



