வாரத்தின் முதல் வணிக நாளான திங்கள் கிழமை பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. இதேபோன்று நிஃப்டி 18 ஆயிரத்து 200க்கு கீழ் நிலைப்பெற்றது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 518.64 புள்ளிகள் சர்ந்து 61,144.84 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.84 சதவிகிதம் சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி147.70 புள்ளிகள் சரிந்து 18,159.95 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.81 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே நேர்மறையாக இருந்தன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
அதிகபட்சமான ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி, டிசிஎஸ், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பஜாஜ் பைனான்ஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.