கார் பிரேக்குகளில் உள்ள கோளாறு காரணமாக சுமார் 15 லட்சம் கார்களை திரும்பப் பெறப்போவதாக ஜெர்மானிய கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ. அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால், பி.எம்.டபிள்யூ. கார்கள் விற்பனை அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் பிரேக் கோளாறால் பாதிக்கப்பட்ட வாகனங்கள் ஜூன் 2022 மற்றும் ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
பி.எம்.டபிள்யூ. எக்ஸ் (BMW X) மாடல்களான (X3 மற்றும் X4), X5 மற்றும் X7 சீரிஸ், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர், மினிகூப்பர் மற்றும் கண்ட்ரிமேன் ஆகிய கார்களும் இந்தப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட 15.3 லட்சம் கார்களில், 12 லட்சம் கார்கள் வாடிக்கையாளரிடம் உள்ளன. சுமார் 3,20,000 கார்கள் டீலர் ஸ்டாக்கில் உள்ளன.
சீனாவில் சுமார் 3,70,000, அமெரிக்காவில் 2,70,000, ஜெர்மனியில் 1,50,000, கொரியாவில் 70,000 மற்றும் பிரான்சில் 60,000 உள்பட 15 லட்சம் கார்கள் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் அதன் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ.வின் இந்தத் திரும்பப் பெறும் முடிவால் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பி.எம்.டபிள்யூ.வின் பங்குகள் 11%-க்கும் அதிகமாக சரிந்தன.
இதுபற்றி பி.எம்.டபிள்யூ. செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பிரேக் கோளாறு ஏற்படுவதற்கு முன்பே கண்டறியும் மென்பொருளை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் உருவாக்கியுள்ளது. பிரேக் கோளாறு கண்டறியப்பட்டால், அது சிஸ்டம் ரீப்ளேஸ்மென்ட்டை இலவசமாகப் பெறுவதற்கு விரைவில் டீலர்ஷிப்பைப் பார்க்குமாறு ஓட்டுநரை எச்சரிக்க வேண்டும். ஆனால், இது சாத்தியமில்லாதது தான்” என்று தெரிவித்துள்ளார்.
கார் பிரேக்குகளில் உள்ள கோளாறு காரணமாக சுமார் 15 லட்சம் கார்களை திரும்பப் பெறப்போவதாக ஜெர்மானிய கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ. அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால், பி.எம்.டபிள்யூ. கார்கள் விற்பனை அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் பிரேக் கோளாறால் பாதிக்கப்பட்ட வாகனங்கள் ஜூன் 2022 மற்றும் ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
பி.எம்.டபிள்யூ. எக்ஸ் (BMW X) மாடல்களான (X3 மற்றும் X4), X5 மற்றும் X7 சீரிஸ், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர், மினிகூப்பர் மற்றும் கண்ட்ரிமேன் ஆகிய கார்களும் இந்தப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட 15.3 லட்சம் கார்களில், 12 லட்சம் கார்கள் வாடிக்கையாளரிடம் உள்ளன. சுமார் 3,20,000 கார்கள் டீலர் ஸ்டாக்கில் உள்ளன.
சீனாவில் சுமார் 3,70,000, அமெரிக்காவில் 2,70,000, ஜெர்மனியில் 1,50,000, கொரியாவில் 70,000 மற்றும் பிரான்சில் 60,000 உள்பட 15 லட்சம் கார்கள் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் அதன் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ.வின் இந்தத் திரும்பப் பெறும் முடிவால் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பி.எம்.டபிள்யூ.வின் பங்குகள் 11%-க்கும் அதிகமாக சரிந்தன.
இதுபற்றி பி.எம்.டபிள்யூ. செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பிரேக் கோளாறு ஏற்படுவதற்கு முன்பே கண்டறியும் மென்பொருளை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் உருவாக்கியுள்ளது. பிரேக் கோளாறு கண்டறியப்பட்டால், அது சிஸ்டம் ரீப்ளேஸ்மென்ட்டை இலவசமாகப் பெறுவதற்கு விரைவில் டீலர்ஷிப்பைப் பார்க்குமாறு ஓட்டுநரை எச்சரிக்க வேண்டும். ஆனால், இது சாத்தியமில்லாதது தான்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மண் வளத்தில் கூட்டணி நிர்பந்தம்!

தமிழக முதல்வருடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவனங்களின் தலைவர்கள் சந்திப்பு!

ரூ. 1 கோடிக்கு புதிய பி.எம்.டபிள்யூ கார் அறிமுகம்! 5 விநாடிகளில் 100 கி.மீ. வேகம்!!

ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி





