ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.85.79-ஆக முடிவு!

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில் இன்று இந்திய ரூபாய் 4 காசுகள் சரிந்து ரூ.85.79ஆக நிலைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 6:30 pm IST

மும்பை: இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரித்த நிலையில், உள்நாட்டில் பங்குச் சந்தை வணிகமானது முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்ததால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 4 காசுகள் சரிந்து ரூ.85.79 ஆக முடிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் பலவீனமான குறிப்பில் தொடங்கி, அதன் இன்ட்ரா டே வர்த்தகத்தில் குறைந்தபட்சமாக ரூ.85.80 ஆகவும், அதிகபட்சமாக ரூ.85.73 ஆகவும், கடைசியில் 4 காசுகள் சரிந்து ரூ.85.79ஆக நிலைபெற்றது.

கடந்த ஆண்டு பெரும்பாலான நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்ததாகவும், இந்த ஆண்டும் டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவான நிலையில் இருப்பதாகவும் அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்கியானது, அமெரிக்க டாலர்களை தொடந்து விற்பனை செய்ததால், இந்தியா ரூபாயின் வீழ்ச்சி சற்று தடுத்து நிறுத்தப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை அன்று வர்த்தகநேர முடிவில் அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.85.75-ஆக இருந்தது.

டிசம்பர் 27 அன்று, இன்ட்ரா-டே வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அதன் வாழ்நாள் சரிவாக ரூ.85.80 ஐ முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.