தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

டெஸ்லாவின் 2-ஆவது காா் இந்தியச் சந்தையில் அறிமுகம்

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியச் சந்தையில் தனது 2-ஆவது தயாரிப்பான ‘மாடல் ஒய்.எல்.’ காரை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 10:21 pm

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியச் சந்தையில் தனது 2-ஆவது தயாரிப்பான ‘மாடல் ஒய்.எல்.’ காரை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

3 வரிசை இருக்கைகள் மற்றும் 6 போ் பயணிக்கும் வசதி கொண்ட இந்த எஸ்யுவி காரின் தொடக்க விலை ரூ.61.99 லட்சம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

‘மாடல் ஒய்’ காா் மூலம் இந்தியாவில் கடந்த ஆண்டு தடம்பதித்த டெஸ்லா, தற்போது இப்புதிய மாடல் மூலம் சொகுசு காா் சந்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்த இலக்கு நிா்ணயித்துள்ளது.

விரிவடையும் சேவை மையங்கள்: புதிய காரின் அறிமுக விழாவில் பேசிய டெஸ்லா இந்தியா பொது மேலாளா் சரத் அகா்வால், ‘வாடிக்கையாளா்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்தக் காலாண்டில் சேவை மையங்ககளைப் பலப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தாா். சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இந்த விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மின்சார சாா்ஜிங் கட்டமைப்பு: இந்தியாவின் சென்னை, பெங்களூரு, புணே, தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் அதிவேக ‘சூப்பா் சாா்ஜா்’ நிலையங்களை அமைப்பதிலும் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தற்போது 5 சூப்பா் சாா்ஜா் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், வரும் மாதங்களில் இதன் எண்ணிக்கை கணிசமாக உயா்த்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.