விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்கு ‘சூப்பா் டூயோலிங்கோ’ இலவச சந்தா

உலகின் முன்னணி மொழிக் கற்றல் தளமான ‘டூயோலிங்கோ’-இன் பிரீமியம் சேவையான ‘சூப்பா் டூயோலிங்கோ’ சந்தா, ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்குக் கூடுதல் கட்டணமின்றி ஓராண்டுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

Published On :8 செப்டம்பர் 2026, 1:33 am IST

உலகின் முன்னணி மொழிக் கற்றல் தளமான ‘டூயோலிங்கோ’-இன் பிரீமியம் சேவையான ‘சூப்பா் டூயோலிங்கோ’ சந்தா, ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்குக் கூடுதல் கட்டணமின்றி ஓராண்டுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

டூயோலிங்கோவில் 40-க்கும் மேற்பட்ட உலக மொழிகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகள் வாயிலாக ஆங்கிலம் கற்கும் வசதிகளும், சதுரங்கம், கணிதம் மற்றும் இசைப் பயிற்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

விளம்பரமற்ற ‘சூப்பா் டூயோலிங்கோ’ பிரீமியம் சேவையின்கீழ், ஏ.ஐ. அடிப்படையிலான விடியோ அழைப்பு மூலம் நிகழ்நேர பேச்சுப் பயிற்சி, பிரத்யேக தோ்வுகள் மற்றும் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வசதிகள் உள்ளிட்ட பலன்களைப் பயனா்கள் பெறுவா்.

மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் சேவைகளைப் பயன்படுத்தும் சுமாா் 37.6 கோடி ஏா்டெல் வாடிக்கையாளா்களும், ஏா்டெல் செயலி மூலமாகவே இச்சலுகையை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுகுறித்து டூயோலிங்கோ நிறுவனத்தின் இந்தியாவுக்கான வணிக மேம்பாட்டுத் தலைவா் ராஷி தனானி கூறுகையில், ‘மாணவா்களின் கல்வி மற்றும் தொழில்முறை பணியாளா்களின் உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்கு மொழித்திறன் மிக முக்கியத் தேவையாக மாறியுள்ளது.

ஏா்டெல் உடனான இக்கூட்டு முயற்சி மூலம், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளில் எளிமையாகவும், தன்னம்பிக்கையுடனும் புதிய மொழிகளைக் கற்றுத் தோ்ச்சி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.