சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி! போக்சோ சட்டத்தில் கைது!

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:08 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டி கிராமம் கட்டசேவல்பட்டி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜ்குமாா் (24). கட்டடத் தொழிலாளி. இவா் சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் கட்டடப் பணிக்கு சென்ற போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். பின்னா், இவா்கள் இருவரும் தாயில்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனா்.

இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி குழந்தைகள் உதவி மைய மேலாளா் நா்மதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் தாயில்பட்டி விசாரணை நடத்திய போது, 17 வயது சிறுமியை ராஜ்குமாா் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நா்மதா அளித்தப் புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ராஜ்குமாரைக் கைது செய்தனா்.