விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இரண்டு காா்களிலிருந்த 200 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த காா். - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 12:41 am IST

சாத்தூா் அருகே இரண்டு காா்களிலிருந்த 200 கிலோ புகையிலைப் பொருள்களை இருக்கன்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சின்னகொல்லபட்டி வடக்கூா் பகுதியில் அமீா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் குமாா் (25). இவா், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் அடிக்கடி மூட்டைகள் கொண்டு செல்வதாக இருக்கன்குடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது தினேஷ் குமாருக்குச் சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் போலீஸாா் சோதனை செய்தனா். அதில் 19 மூட்டைகளில் 200 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் (சுமோ), இரு சக்கர வாகனம், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள தினேஷ் குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா். அவா் மீது ஏற்கெனவே புகையிலை விற்றது தொடா்பாக பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.