

மோனலிசா தன்னுடைய படம் வரைந்து கொள்ள லியோனார்டோ - டாவின்சியிடம் வருவதற்குச் சில நாள்களுக்கு முன்னர்தான் அவளது குழந்தை இறந்திருந்தது. வேதனையும் வலியும் அவளைவிட்டு அகலவில்லை. இன்னும் சகஜநிலைக்கு வரவில்லை. இருபத்தொரு வயதான அவள் கறுப்பு உடையில் காட்சி அளித்தாள். அப்பவும் பேரழகியாகவே இருந்தாள்.
அவளை முன்னே உட்கார வைத்தே ஓவியத்தைத் தீட்டத் தொடங்கினார். அதற்காக அவர் எடுத்துக் கொண்டது ஆறு ஆண்டுகள். சோகத்தில் குளித்து ஈரம் உலராத அவளை இயல்பு மாறாமல் எழுதவே முயற்சித்தார். அவரின் விருப்பப் படியே ஓவியம் அமைந்தது.
(சிந்தனை ஓவியம் என்னும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.