தேவையானவை :
பாசுமதி அரிசி - 1 கிண்ணம்
குடைமிளகாய் - 2
வெங்காயம், தக்காளி - தலா 1
புதினா, கொத்துமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு,
பெருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும். அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு பச்சை வாசனைப் போனவுடன் தக்காளி, புதினா, கொத்துமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். தக்காளி குழைய வதங்கியதும் அதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். குடைமிளகாய் புதினா புலாவ் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திருச்சி அருகே 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

திருச்சியில் சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா் கைது

நாகை: 53 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

