தேவையான பொருள்கள்:
பொரிகடலை பருப்பு, வேர்க்கடலை பருப்பு, எள், நெய்- தலா 200 கிராம்
கோதுமை மாவு, ராகி மாவு- தலா 250 கிராம்
அரிசிப் பொரி- 50 கிராம்
முந்திரிப் பருப்பு- 20
ஏலக்காய்- 4
வெல்லம்- 400 கிராம்
செய்முறை:
வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து அரிசிப் பொரி சேர்த்து பொடி செய்ய வேண்டும். ஏலக்காயை பொடி செய்ய வேண்டும். முந்திரிப் பருப்புகளை மெல்லிய துண்டுகளாக்கி பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
வாணலியில் நெய் முழுவதையும் விட்டு கோதுமை மாவு, ராகி மாவு சேர்த்து வாசனை வரும்வரை வறுக்க வேண்டும். பிறகு பொடித்துவைத்திருக்கும் பொடி சேர்த்து கிளறி விட்டு பொடி செய்த வெல்லத்தைப் போட்டு கிளற வேண்டும். ஏலப்பொடி, முந்திரிப் பருப்புத் துண்டுகள் போட்டு கலந்து இறக்கி உருண்டைகளைப் பிடிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


