தேவையான பொருள்கள்
கீரை- 1 கட்டு
மிளகாய் வற்றல்- 4
கடலை பருப்பு -4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -3 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
எண்ணெய் -5 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
தேவையானால் சிறிய தேங்காய் கீற்று
செய்முறை:
கீரையைச் சுத்தம் செய்து, கழுவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். வெறும் வாணலியில் 2 தேக்கரண்டி கடலை பருப்பு, 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்து தேங்காயுடன் பொடி செய்து வைத்துகொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பருப்புகளை கடுகு வெடித்ததும் போட்டு, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூளுடன் போட்டுக் கீரையையும் போட்டு வதக்கவும்.
சற்று வதங்கிய பின்னர், கெட்டியாக புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்க விடவும். தேவைக்கேற்ப உப்புப் போடவும். சற்று புளி வாசனை போனதும் தேவையானால் சிறிய கட்டி வெல்லமும் சேர்க்கலாம். பிறகு அரைத்துப் பொடி செய்து வைத்துள்ள பொடியைக் கொட்டி இறக்கவும். பொல பொலவென்று சாதம் வடித்து, ஆறவிட்டு கிளறி மூடி வைக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல்வருக்கு கீரை அனுப்பும் போராட்டம்: தமிழ்ப் புலிகள் கட்சியினா் கைது
சமையல்... சமையல்...: வடாம் வகைகள்!
சம்பா வடை
முருங்கைக்கீரை தோசை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


