/

தலையோடு சொல்லும் சேதி

சுடுகாட்டிலே கிடக்கின்ற இறந்தவர்களுடைய தலையோடானது, தன்னைக் கண்டவர் நெஞ்சம் அச்சங் கொள்ளும்படியாகப் பள்ளமாகிக் குழிந்திருக்கிற கண்களை உடையதாகத் தோன்றி...

News image
Updated On :8 மார்ச் 2026, 11:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

கழிந்தார் இடுதலை, கண்டார் நெஞ்சு உட்கக்,

குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி,-ஒழிந்தாரைப்

'போற்றி நெறிநின்மின்; இற்றிதன் பண்பு' என்று

சாற்றுங்கொல், சாலச் சிரித்து.

(பாடல் 49 அதிகாரம்: தூய்து அன்மை)

சுடுகாட்டிலே கிடக்கின்ற இறந்தவர்களுடைய தலையோடானது, தன்னைக் கண்டவர் நெஞ்சம் அச்சங் கொள்ளும்படியாகப் பள்ளமாகிக் குழிந்திருக்கிற கண்களை உடையதாகத் தோன்றி, ''உடலின்கண் பற்று ஒழித்த சான்றோரைப் போற்றி அவர்கள் நின்ற நெறியிலேயே நில்லுங்கள்; இவ்வுடம்பின் குணம் இறுதியில் இப்படிப்பட்டதுதான்'' என, மிகவுஞ் சிரித்துச் சொல்லும் போலும்! அத்தலையோட்டைக் காண்பவர்கள், உடலின் தூய்து அன்மையை உணர்ந்து நெறிப்படுதல்

கூடுமாதலால், 'அது சொல்லும் போலும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.