அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மன்ஹாட்டன் குண்டுவெடிப்பு சம்பவம்: சந்தேக நபரின் புகைப்பபடத்தை வெளியிட்ட அமெரிக்கா !

அமெரிக்காவில் சனிக்கிழமை அன்று மன்ஹாட்டன் பகுதியில் 29 பேர் மரணம் அடையக்  காரணமாக அமைந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படம் குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2016, 3:26 pm IST

அமெரிக்காவில் சனிக்கிழமை அன்று மன்ஹாட்டன் பகுதியில் 29 பேர் காயமடையக் காரணமாக அமைந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள செல்சியா மாவட்டத்தில் சனிக்கிழமையன்று இரவு நிகழ்ந்த 'பிரஷர் குக்கர்' குண்டு வெடிப்பில் 29 பேர் பலியாகினர். சம்பவ இடத்திற்கு அருகே அதே போன்ற மற்றும் ஒரு கருவி கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்துபேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் இன்று நியூயார்க் போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் 28 வயது நிரம்பிய, ஆப்கானிஸ்தான் நாட்டு குடிமகனான அஹ்மது கான் ரஹ்மானியை, மன்ஹாட்டன் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடிவருவதாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.