அமெரிக்காவில் சனிக்கிழமை அன்று மன்ஹாட்டன் பகுதியில் 29 பேர் காயமடையக் காரணமாக அமைந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள செல்சியா மாவட்டத்தில் சனிக்கிழமையன்று இரவு நிகழ்ந்த 'பிரஷர் குக்கர்' குண்டு வெடிப்பில் 29 பேர் பலியாகினர். சம்பவ இடத்திற்கு அருகே அதே போன்ற மற்றும் ஒரு கருவி கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்துபேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று நியூயார்க் போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் 28 வயது நிரம்பிய, ஆப்கானிஸ்தான் நாட்டு குடிமகனான அஹ்மது கான் ரஹ்மானியை, மன்ஹாட்டன் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடிவருவதாக அறிவித்துள்ளது.