காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கியூபா - கரோனாவால் 4,000 பேர் பலி

கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு நாடுகளும் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள் 

News image

கியூபா - கரோனாவால் 4,000 பேர் பலி

Updated On :16 ஆகஸ்ட் 2021, 6:06 am

DIN

கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு நாடுகளும் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் கியூபாவில் இதுவரை கரோனா தொற்றுக்கு 4,024 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மேலும் புதிதாக 8,636 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் இறந்திருக்கிறார்கள்.

தொற்று குறித்து பேசிய நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ டூரான் , ' அதிவேகமாக தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் தொற்றுப் பரவலை குறைத்து வருகிறோம். கூடிய விரைவில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவோம்' எனத் தெரிவித்திருக்கிறார்.

தலைநகர் ஹவானாவில் புதிதாக 1,071 பேருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  

கியூபாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனாவால் 5,00,624 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.