டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தடுப்பூசி செலுத்தியவர்கள் கரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு; ஆய்வில் வெளியான புதிய தகவல்

கரோனா தடுப்பூசி செலுத்தாத 1,00,000 பேரில் 16 பேர், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 நவம்பர் 2021, 12:53 pm IST

முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உயிரிழப்பது தடுப்பூசி செலுத்தாதவர்களை விட 16 மடங்கு குறைவு என்பது ஆஸ்திரேலிய அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தாத 1,00,000 பேரில் 16 பேர், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திய 1 லட்சம் பேரில் ஒருவருக்கும் குறைவானவரே கரோனாவால் உயிரிந்துள்ளார் என்பது நியூ செளத் வேல்ஸ் சுகாதாரத்துறை சேகரித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

காலபோக்கில் தடுப்பூசி வெளிப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலில் கரோனா ஏற்பட வாய்ப்புள்ளபோதிலும், தீவிரமான கரோனா மற்றும் அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்பிலிருந்து தடுப்பூசி பாதுகாப்பு தருவது இந்த ஆய்வின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் கரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்பு தடுப்பூசி செலுத்தாதவர்களை விட 20 மடங்கு குறைவு என்பது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பல்வேறு நாடுகள் கரோனாவை எண்டெமிக் நோயாக எதிர்கொள்வதற்கான வாய்ப்பை இந்த ஆய்வுகள் அதிகப்படுத்தும். இதன் காரணமாக, தடுப்பூசி செலுத்திவயர்களுக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்படலாம். அதுமட்டுமின்றி, மக்கள் பெரிய எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசியை எடுத்து கொள்வதன் மூலம் சுகாதார கட்டமைப்பின் மீது கரோனா ஏற்படுத்திய நெருக்கடி குறைக்கப்படும். 

மக்கள் மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் கூடுவது தவிர்க்கப்படும். தீவிர சிகிச்சை பிரிவின் தேவை குறையும். இவை, அனைத்தும், கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய காலத்தில் உலக நாடுகள் சந்தித்த மிகப் பெரிய சவால்களாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.