தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
தென்கொரியாவில் 1979ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியவர் சுன் டூ-ஹ்வான். ராணுவ வீரரான இவர் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
இதையும் படிக்க | கமலிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்
அதனைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரோஹ் வெற்றி பெற்று தென்கொரிய அதிபரானார்.
இந்நிலையில் 90 வயதான சுன் டூ-ஹ்வான் அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் ரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை மாரடைப்பு காரணமாக தனது வீட்டில் மரணமடைந்தார்.