மூன்றாம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும்!

மூன்றாம் உலகப்போர் மிக அருகில் உள்ளது எனவும் அதை தன்னால் மட்டுமே தடுக்க முடியும் எனவும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப்

மூன்றாம் உலகப்போர் விரைவில் வெடிக்கவிருப்பதாகவும், அதைத் தடுக்க தன்னால் மட்டுமே முடியும் எனவும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். 

தற்போது தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் எனக் கொலாராடோ நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில் தான் பொறுப்பில் இருந்தால் மூன்றாம் உலகப்போரைத் தடுக்க முடியும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அதிபர் ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கைகளைக் குற்றம் சாட்டிய அவர், அணுசக்தி போர் நடைபெறுவதற்கான அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 'டிரம்ப் பிரதமராக இருந்திருந்தால் உக்ரைனிலும் ஐரோப்பாவிலும் போரே நடந்திருக்காது' என ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் கூறியதைச் சுட்டிக்காட்டினார். 

'மூன்றாம் உலகப்போர் வெறும் ராணுவங்களுக்கு இடையேயான சண்டையாக முடிந்துவிடாது. உலகையே அழித்துவிடும்' எனவும் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com