கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

என்ன நடக்கிறது சீனத்தில்? விளக்கம் கேட்கும் உலக சுகாதார நிறுவனம்

சீனத்தின் வடக்குப் பகுதிகளில் பரவி வரும் நுரையீரல் தொற்று நோய் குறித்து விவரங்களை அளிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கோரியிருக்கிறது.

News image
Updated On :23 நவம்பர் 2023, 10:47 am

ENS


பெய்ஜிங்: சீனத்தின் வடக்குப் பகுதிகளில் பரவி வரும் நுரையீரல் தொற்று நோய் குறித்து விவரங்களை அளிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கோரியிருக்கிறது.

இந்த நுரையீரல் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறு மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு சீனப் பகுதிகளில், இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அக்டோபர் மாதம் மத்தியில் தொடங்கி தற்போது வரை வேகமாகப் பரவி வருகிறது இந்த காய்ச்சல்.

இதையடுத்து, சீனாவில் பரவி வரும் காய்ச்சல் மற்றும் சிறார்களிடையே பரவி வரும் தொற்று குறித்து விரிவான தகவல்களை அளிக்குமாறு சீனாவுக்கு அதிகாரப்பூர்வ கோரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளது.

சீனாவில் தற்போது குளிர்காலம் நிலவுவதால், அது தொடர்பான வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைக்குள் அங்கு வெப்பநிலை பூஜ்ஜியம் அளவைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு, பருவக்கால நோய்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சீனத்தின் வடக்குப் பகுதியில் பள்ளிச் செல்லும் சிறார்களே இதுபோன்ற பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கரோனா தொற்றுப் பரவலின்போது, சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டியிருந்தது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அது தொடர்பாக காரசார விவாதங்கள் முடிந்துபாடில்லை. இந்த நிலையில், தற்போது புதிய நுரையீரல் பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் விரிவான அறிக்கையை கோரியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.