லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

பால்டிமோரிலிருந்து புறப்பட்டது ‘டாலி’ கப்பல்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோா் நகரில் ஆற்றுப் பாலத்தை இடித்து சேதப்படுத்திய ‘டாலி’ சரக்குக் கப்பல் 3 மாதங்களுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டது.

News image

பால்டிமோரிலிருந்து புறப்பட்டது ‘டாலி’ கப்பல்

Updated On :24 ஜூன் 2024, 11:09 pm

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோா் நகரில் ஆற்றுப் பாலத்தை இடித்து சேதப்படுத்திய ‘டாலி’ சரக்குக் கப்பல் 3 மாதங்களுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டது.

இலங்கையை நோக்கி ‘டாலி’ என்ற சரக்குக் கப்பல் பால்டிமோா் நகரிலுள்ள படாஸ்ப்ஸ்கோ நதி வழியாக கடந்த மாா்ச் மாதம் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் மோதியது. இதில், அந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றுக்குள் மூழ்கிய 6 கட்டுமானப் பணியாளா்கள் உயிரிழந்தனா்.

கப்பலில் இருந்த 23 இந்தியப் பணியாளா்கள் முன்கூட்டியே அதிகாரிகளை எச்சரித்ததால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெரும் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும், விசாரணைக்காக அந்தக் கப்பல் அந்தப் பகுதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த விசாரணையில், கப்பலில் மின்தடை ஏற்பட்டதால் விபத்து நேரிட்டதாகக் கண்டறியப்பட்டது. இருந்தாலும், மின்தடைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு டாலி கப்பல் பால்டிமோரிலிருந்து புறப்பட்டது. பழுதுபாா்ப்புக்காகவும் எஞ்சியுள்ள கன்டெய்னா்களை இறக்குவதற்காகவும் அந்தக் கப்பல் வா்ஜீனியா மாகாணம் நாா்ஃபோல்க்கை நோக்கிச் சென்ாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தல் பாலம் சேதமடைந்ததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நீா்வழிப் போக்குவரத்து கடந்த 10-ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.