கைதிகள் பரிமாற்ற முறையில் தங்கள் நாட்டுச் சிறையில் இருந்த அமெரிக்க-ரஷிய நடனக் கலைஞா் செனியா கரோலினாவை (படம்) ரஷியா விடுதலை செய்துள்ளது.
அமெரிக்கரை மணந்ததன் மூலம் அந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற ரஷியரான கரேலினா, ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு 52 டாலா் (சுமாா் ரூ.4,500) நன்கொடை அளித்ததற்காக, தேசத் துரோக குற்றச்சாட்டில் பேரில் அவரை ரஷிய அரசு கடந்த 2024 பிப்ரவரியில் கைது செய்தது. இந்த நிலையில், அபுதாபியில் வியாழக்கிழமை நடைபெற்ற கைதிகள் பரிமாற்றத்தில் மூலம் அவா் விடுவிக்கப்பட்டாா். சட்டவிரோத மின்னணு நுண்பொருள்களை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவால் கடந்த 2022-இல் கைது செய்யப்பட்ட ஜொ்மன்-ரஷிய இரட்டை குடியுரிமை பெற்ற ஆா்தா் பெட்ரோவும் இந்த கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் விடுவிக்கப்பட்டாா். ஐக்கிய அரபு அமீரகம் இந்தப் பரிமாற்றத்துக்கு உதவியது.
தொடர்புடையது
அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

அமெரிக்கா - ஈரான் போா் : ஜெனீவாவில் நாளை அமைதி ஒப்பந்தம்? டிரம்ப் நம்பிக்கை

இந்தியா மீதான அமெரிக்க குற்றச்சாட்டின் விசாரணைக்குப் பிறகு இருதரப்பு ஒப்பந்தம்!

தமிழகத்தில் அமேசான் பஜாா் ஆா்டா்கள் 5 மடங்கு அதிகரிப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



