தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பாகிஸ்தானில் இரு வெவ்வேறு சாலை விபத்துகள்: 16 பேர் பலி, 45 பேர் காயம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலியாகினர்.

News image

கோப்புப்படம் - Din

Updated On :16 பிப்ரவரி 2025, 2:58 pm IST

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலியாகினர்.

சிந்துவின் ஷாஹீத் பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள குவாசி அகமது நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த வேன் டிரெய்லருடன் சனிக்கிழமை மோதியது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து குவாசி அகமது காவல் அதிகாரி வசீம் மிர்சா கூறுகையில், ஜாம்ஷோரோ மாவட்டத்தின் செஹ்வான் நகரில் உள்ள லால் ஷாபாஸ் கலந்தர் சன்னதிக்கு வேன் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது வேன் முதலில் ஒரு கழுதை வண்டி மீது மோதியது. அதைத்தொடர்ந்து எதிர்புறத்தில் இருந்து வந்த டிரெய்லருடனும் மோதியது.

மற்றொரு விபத்தில், மாகாணத்தின் கைர்பூர் மாவட்டம், ராணிபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 11 பேர் பலியாகினர்.

35 பேர் காயமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் புரேவாலாவில் இருந்து வந்த பேருந்து ரிக்ஷா மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலியான பயணிகள் அனைவரும் பஞ்சாபின் புரேவாலாவைச் சேர்ந்தவர்கள்.

போக்குவரத்து விதிகளை மீறுவது உள்ளிட்ட முக்கிய காரணங்களால் பாகிஸ்தான் நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.