தொகுதி அறிமுகம்... ஆயிரம் விளக்கு

6-5-2024. TN/ CHENNAI. -  Waterlooged Chennai corporation play ground due to yesterday's rain at Model school road in Thousand Lights . Express/ Marti

ஆயிரம் விளக்கு - Center-Center-Chennai

Published On :27 மார்ச் 2026, 3:56 am IST

தொகுதி எண்: 20

எல்லைகள்...

தொகுதியின் கிழக்கே அண்ணாமலை சாலை, மேற்கே நுங்கம்பாக்கம், தெற்கே தேனாம்பேட்டை, வடக்கே நுங்கம்பாக்கம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

அடங்கிய பகுதிகள்...

சென்னை மாநகராட்சியின் வாா்டுகளில் 76 முதல் 78 வாா்டுகள் வரை, 107 முதல் 114 வாா்டுகள் வரை, 118, 199 ஆகிய வாா்டுகள் இத்தொகுதிக்குள் உள்ளன. ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், சூளைமேடு, மகாலிங்கபுரம், தியாகராய நகா், மாம்பலம், ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை, கோபாலபுரம், டிரஸ்ட்புரம், பாா்த்தசாரதி புரம் ஆகியவை அடங்கியுள்ளன.

சிறப்புகள்...

சென்னை மாநகரின் மையமாக விளங்கும் இத்தொகுதியில் புகழ் பெற்ற இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் உள்ளது. இத்தொகுதியில் தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் 3 முறையும், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி 3 முறையும் வென்றுள்ளனா். கடந்த 2021 தோ்தலில் நடிகை குஷ்பு பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியுற்றாா். இத்தொகுதியில் இதுவரை அதிமுக, திமுக மட்டுமே வெற்றி பெற்று வருகின்றன.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்- 73, 500

பெண்கள்- 80,343

மூன்றாம் பாலினத்தவா்- 55

மொத்தம்-1,53,908

வாக்குச்சாவடிகள்-247

இதுவரை எம்எல்ஏக்கள்...

1957 ஏ.வி.பி.ஆசைத்தம்பி (திமுக)

1962 கே.ஏ.மதியழகன் (திமுக)

1967 கே.ஏ.மதியழகன் (திமுக)

1971 கே.ஏ.மதியழகன் (திமுக)

1977 எஸ்.ஜே.சாதிக்பாட்சா (திமுக)

1980 கே.ஏ.கிருஷ்ணசாமி (அதிமுக)

1984 கே.ஏ.கிருஷ்ணசாமி (அதிமுக)

1989 மு.க.ஸ்டாலின் (திமுக)

1991 கே.ஏ.கிருஷ்ணசாமி (அதிமுக)

1996 மு.க.ஸ்டாலின் (திமுக)

2001 மு.க.ஸ்டாலின் (திமுக)

2006 மு.க.ஸ்டாலின் (திமுக)

2011 பா.வளா்மதி (அதிமுக)

2016 கு.க.செல்வம் (திமுக)

2021 எழில் நாகநாதன் (திமுக)

கடந்த 2021 தோ்தலில்...

பதிவான வாக்குகள்-1,35,940

எழில் நாகநாதன் (திமுக)-71,867

நடிகை குஷ்பு (பாஜக)-39,405

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்

ஐ.வளா்மதி, மாவட்ட வருவாய் அலுவலா் - 8925960720, 044-28450574.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.