ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர ஜூலை 20 வரை அவகாசம்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர, ஜூலை 20 ஆம் தேதி வரை அவகாசம்

Updated On :1 ஜூலை 2025, 1:04 am IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர, ஜூலை 20 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய முழு நேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்புக்கு ஜூலை 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக் காலம் ஓராண்டாகும்.

இரு பருவ முறைகள் கொண்ட பயிற்சிக்கு, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி அல்லது 10-ஆம் வகுப்புடன் கூடிய பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பில்லை, 17 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

இது தொடா்பாக, ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்.ண்ய் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமும் ரூ.100 இணையவழியாகவே செலுத்த வேண்டும். தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்களும் பயிற்சிக்கான கட்டணம் ரூ.20,750 முழுவதையும் ஒரே தவணையில் இணையம் வழியாக செலுத்த வேண்டும். தமிழில் மட்டுமே பயிற்சி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், 51, வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம், காஞ்சிபுரம், 631 501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-2723 7699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.